உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போதையில் கார் ஓட்டி சென்றவர்களை போலீசார் தாக்கும் வீடியோ வைரல்

போதையில் கார் ஓட்டி சென்றவர்களை போலீசார் தாக்கும் வீடியோ வைரல்

கோவை; கோவை, உக்கடம், வின்சென்ட் சாலையில் கடந்த 25ம் தேதி இரவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்ய முயன்றபோது, காருக்குள் இருந்த நபர் வெளியே வராமல் உள்ளே இருந்தபடி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மது போதையில் உள்ளனரா என்பதை சோதனை செய்ய போலீஸ்காரர் ஒருவர் காருக்குள் சென்று பார்த்த போது, காரை வேகமாக எடுத்து சென்றுள்ளார்.இதயைடுத்து, சக போலீசார் காரை துரத்திச்சென்று மடக்கி பிடித்தனர். அப்போதும், கீழே இறங்க மறுத்த இளைஞர்களை போலீசார் வெளியில் வரவழைத்தனர். அப்போது, அவர்கள் மதுபோதையில் இருப்பது தெரியவந்தது. மதுபோதையில் காரை ஓட்டி சென்றதால் போலீசார் வாலிபர்களை நடுரோட்டில் வெளுத்து வாங்கினர். பின்னர், மதுபோதையில் வாகனம் ஓட்டியதற்காக அபராதம் விதித்து, எச்சரித்து அனுப்பினர். இதை அப்பகுதயில் வசிக்கும் நபர் ஒருவர் தனது மொபைலில் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

lana
ஜூலை 11, 2025 15:56

இது பொதுமக்கள் க்கு தான் ஆபத்து ஆக முடியும். இது போன்ற கார் இல் வந்து தப்பு செய்தால் அங்கேயே அடிப்பது மட்டுமே செய்ய முடிந்த தண்டனை. அதுவும் இல்லை என்றால் அவர்கள் பணத்தை இறைத்து தப்பி விடுவார்கள்


அப்பாவி
ஜூலை 11, 2025 10:50

ஏன் உயிரோடு உட்டீங்க? குடிச்சுட்டு சொகுசு கார் ஓட்டுவாஙளாம். வெறும் அபராதத்தோடு போயிருக்க வேண்டியதுதானே. மொபைலில் படம் புடிச்சவனையும் வெளுத்து வாங்கியிருக்கணும். பல உயிர்களை காப்பாற்றிய போலுசுக்கு நன்றி


சந்திரசேகர்
ஜூலை 11, 2025 09:55

போதையில் வாகனம் ஓட்டும் அனைவரையும் கொலை குற்றமாக கருதி அவர்களை கைது செய்ய வேண்டும்.ஏனென்றால் இவர்களால் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உயிர் இழக்கும் அபாயம் உள்ளது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை