வாக்காளர் படிவம் பதிவேற்றும்பணி விரைவில் முடியும்
கோவை: வாக்காளர்களிடமிருந்து வாக்காளர் படிவங்களை பெற்று, செயலியில் பதிவேற்றம் செய்யும் பணிகள் ஓரிரு தினங்களில் நிறைவடையும் என்று, கலெக்டர் பவன்குமார் கூறினார்.
கலெக்டர் கூறியதாவது:
ஏற்கனவே வாக்காளர்களிடம் வழங்கிய வாக்காளர் படிவங்களை திரும்ப பெறுவதற்காக, நிலைய அலுவலர்கள் வீடு வீடாக சென்று படிவங்களை பெற்று வருகின்றனர். படிவங்களை பெற டிச.,11ம் தேதி கடைசி தேதியாக இருந்தாலும், அதற்கு முன்னதாகவே பணிகளை முடிக்க வேண்டும். அதற்காக பணிகளை வேகப்படுத்தி வருகிறோம். ஓரிரு தினங்களில் பணிகள் முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.