உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  மூனு நாள் ஜில்லுனு காத்து வீசுமுங்க!

 மூனு நாள் ஜில்லுனு காத்து வீசுமுங்க!

கோவை: 'அடுத்த 3 நாட்களுக்கு கோவை மாவட்டத்தில் மழை இருக்காது. ஆனால், மணிக்கு 4 முதல் 8 கி.மீ., வேகத்தில் குளிர்ந்த காற்று வீசும். வானிலை வறட்சியாக இருப்பதால், தேவையறிந்து நீர் பாய்ச்சவும். மக்காச்சோளத்துக்கு போதிய நீர்ப்பாசனம் செய்வதால், மகசூல் இழப்பைத் தவிர்க்கலாம். படைப்புழு தென்பட்டால், பூச்சிக்கொல்லி தெளிக்கவும். கரும்பில் இளங்குருத்துப் புழு, வாழையில் பாக்டீரியா குருத்து அழுகல், தக்காளி, மரவள்ளியில் வெள்ளை ஈ தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது. உரிய பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை செய்யவும்' என, வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை