சிறுவாணியில் நீர் மட்டம் குறைவு
கோவை; சிறுவாணி அணையில் நேற்று முன்தினம், 42.64 அடியாக நீர் மட்டம் இருந்தது. அதிகபட்சமாக, 44.61 அடிக்கு நீர் தேக்க, கேரள நீர்ப்பாசனத்துறை அனுமதி அளித்திருக்கிறது. அதற்கு, 2 அடி தண்ணீர் தேவை. என்றாலும் கூட, மழை தொடர்ந்து பெய்ததால், 20 செ.மீ., உயரத்துக்கு மதகு திறக்கப்பட்டு, தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதன் காரணமாக, நேற்றைய தினம், 41.66 அடியாக நீர் மட்டம் குறைந்தது.