உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இளநீர் பண்ணை விலை ஒரு ரூபாய் உயர்வு

இளநீர் பண்ணை விலை ஒரு ரூபாய் உயர்வு

பொள்ளாச்சி : பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதியில், இளநீர் பண்ணை விலை கடந்த வார விலையை விட ஒரு ரூபாய் ரூபாய் உயர்ந்துள்ளது.ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:இந்த வாரம், நல்ல தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீரின் விலை, கடந்த வார விலையை ஒப்பிடுகையில் ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டு, 27 ரூபாய் என நிர்ணயம் செய்யப்படுகிறது.அதன்படி, ஒரு டன் இளநீரின் விலை, 10 ஆயிரம் ரூபாய். பொங்கல் பண்டிகை முடிந்து இளநீர் அறுவடை மீண்டும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சிவப்பு இளநீர் வரத்து தொடர்ந்து மிகவும் குறைந்துள்ளது.வீரிய ஒட்டு இளநீர் வரத்தும் கடந்த மாதத்தை விட குறைந்து காணப்படுகிறது. வடமாநிலங்களில் இன்னும் குளிரான சீதோஷ்ண நிலை உள்ளதால் இளநீர் விலையை கணிசமாக உயர்த்த முடியவில்லை.வரக்கூடிய வாரங்களில் இளநீர் விலை தொடர்ந்து உயரும். வியாபாரிகளிடம் விலையைப் போராடி கேட்டு பெற வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !