உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தனியார் நிறுவனங்களில் வேலை! வரும் 25ம் தேதி கிடைக்கும்

தனியார் நிறுவனங்களில் வேலை! வரும் 25ம் தேதி கிடைக்கும்

பெ.நா.பாளையம் : கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில், சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம் வரும், 25ம் தேதி நடக்கிறது.கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் வாயிலாக தனியார் நிறுவனங்களில் பணியாற்ற சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும், 25ம் தேதி வெள்ளிக்கிழமை காலை, 10:00 மணி முதல் கவுண்டம் பாளையத்தில் உள்ள கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நடக்கிறது.முகாமில், பத்தாம் வகுப்பு, பிளஸ், 2, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, இன்ஜினியரிங் பட்டப்படிப்பு முடித்தவர்கள், தங்களது சுயவிபரம் மற்றும் கல்வி சான்று நகல்களுடன் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு பெறலாம்.முகாமில் பங்கேற்க வயது வரம்பு இல்லை. அனுமதி இலவசம். பல முன்னணி தனியார் நிறுவனங்கள் முகாமில் பங்கேற்று, பல்வேறு பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு, பணி நியமன ஆணை உடனடியாக வழங்கப்படும். முகாமில், பணி நியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு, ரத்து செய்யப்பட மாட்டாது.மனுதாரர்கள், www. tnprivatejobs.tn.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை