உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிறுமி பலாத்கார வழக்கில் தொழிலாளிக்கு சிறை

சிறுமி பலாத்கார வழக்கில் தொழிலாளிக்கு சிறை

கோவை: சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ரத்தினபுரியை சேர்ந்தவர் சர்தாஜ்,37; கூலித்தொழிலாளியான இவர், 15 வயது சிறுமியை மிரட்டி, பலாத்காரம் செய்தார். புகாரின் பேரில், கோவை மத்திய பகுதி அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து, 2022 மார்ச் 10ல் சர்தாஜை, போக்சோ சட்டத்தின் கீழ், கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது, கோவை முதன்மை போக்சோ சிறப்பு கோர்ட்டில், வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. விசாரித்த நீதிபதி பகவதியம்மாள், குற்றம்சாட்டப்பட்ட சர்தாஜிக்கு, 20 ஆண்டு சிறை, 20,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை