நிருபர்கள் மீது அவதுாறு பரப்பிய யூ டியூபர் கைது
கோவை : கோவையில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் மீது, அவதுாறு கருத்து பரப்பியதாக, யூ டியூபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். வெள்ளானைப்பட்டியை சேர்ந்தவர் மருதாசலம், 48; யூ டியூப் சேனல் நடத்தி வருகிறார். இவர், கோவை பிரஸ் கிளப் உறுப்பினர்களாக உள்ள பத்திரிகையாளர்கள், சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களிடம் இருந்து, மாதம்தோறும் பணம் பெற்று வருவதாகவும், அதற்கு பிரஸ் கிளப் தலைவராக இருந்த பாபு, முக்கிய பங்கு வகித்து வந்ததாகவும் கடந்த செப்., 22ம் தேதி, தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார். பாபு தவிர, முன்னணி தொலைக்காட்சி நிருபர்கள், கேமராமேன்களின் பெயர்களையும் குறிப்பிட்டு, குற்றச்சாட்டை முன்வைத்தார். இதையடுத்து, தன் மீது உண்மைக்கு புறம்பான கருத்துக்களை மருதாசலம் பரப்பி வருவதாக, கோவை சைபர் கிரைம் போலீசுக்கு, இணைய வழியில் பாபு புகார் அளித்தார். விசாரித்த சைபர் கிரைம் போலீசார், மருதாசலத்தை கைது செய்தனர்.