உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பைக் விபத்தில் வாலிபர் பலி

பைக் விபத்தில் வாலிபர் பலி

கடலுார்: கடலுார் அருகே லாரி மீது பைக் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார்.ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அடுத்த நம்புதலை பகுதியை சேர்ந்தவர் நைனாமுகமது மகன் இஸ்மத் கான், 20; கடலுார் முதுநகரில் ஓட்டலில் பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று அதிகாலை பைக்கில் கடலுார் - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றார். முதுநகர் திருமண மண்டபம் அருகே சென்றபோது, நின்றிருந்த டிப்பர் லாரி மீது பைக் மோதியது. இதில் இஸ்மத்கான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.கடலுார் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ