உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வாகனம் மோதி முதியவர் பலி

வாகனம் மோதி முதியவர் பலி

சிதம்பரம்: சிதம்பரம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் ஒருவர் இறந்தார். சிதம்பரம் அடுத்த அழிஞ்சிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் துரைராஜ், 62. இவர், நேற்று காலை 6:00 மணி அளவில் ராகவேந்திரா கல்லுாரி மேம்பாலம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி, துரைராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.விபத்து குறித்து சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !