கடலூர் ரூட்ஸ் பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா
கடலுார்: கடலூர் ரூட்ஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் விநாயகர் சதுர்த்தி, ஆசிரியர் தினம் மற்றும் ஓணம் பண்டிகை விழா கொண்டாடப்பட்டது.பள்ளி தாளாளர் முருகன் தலைமை தாங்கினார். மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி முதல்வர் சரளா முருகன் பரிசு வழங்கினார்.நிகழ்ச்சியில் புராண கதை நாடகம், ஓணம் பூக்கோலம் போடுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது. பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர் பங்கேற்றனர்.பள்ளி தாளாளர் முருகன் நன்றி கூறினார்.