கிருஷ்ண ஜெயந்தி உறியடி உற்சவம்
கடலுார் : கடலுார், புதுப்பாளையத்தில் திரவுபதியம்மன் கோவிலில் கிருஷ்ணர் சன்னதி உள்ளது. இங்கு கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.இரவு சிறப்பு அலங்காரத்தில் முக்கிய வீதிகள் வழியாக சுவாமி வீதியுலா நடந்தது. பின், நடந்த உறியடி உற்சவத்தில் இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு உறியடித்தனர்.ஏற்பாடுகளை பா.ஜ., ஆன்மிக பிரிவு மாவட்டத் துணைத் கிருஷ்ணன் தலைவர் மற்றும் அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.