உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

கடலுார்: கடலுார் பழைய கலெக்டர் அலுவலகம் எதிரில், மா.கம்யூ., கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.வழக்கறிஞர் ஜோதிலிங்கம் தலைமை தாங்கினார். வழக்கறிஞர்கள் லெனின், சுரேஷ்குமார் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் மாதவன் கண்டன உரையாற்றினார். புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். சமஸ்கிருதம், ஹிந்தி மொழிகளில் புதிய குற்றவியல் சட்டங்களுக்கு பெயர் வைக்கக்கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மருதவாணன், ராஜேஷ்கண்ணன், மாநகர செயலாளர் அமர்நாத், ஒன்றிய செயலாளர் பஞ்சாட்சரம், சிப்காட் செயலாளர் சிவானந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ