உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தாய் கண்டிப்பு மகன் தற்கொலை

தாய் கண்டிப்பு மகன் தற்கொலை

குள்ளஞ்சாவடி: தாய் கண்டித்ததால் பிளஸ்-2 மாணவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.குள்ளஞ்சாவடி அடுத்த கட்டியங்குப்பத்தை சேர்ந்தவர் சுதாகர். இவரது மகன் சுபாஷ், 17; கொள்ளுக்காரன்குட்டை தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவர் கடந்த, 27ம் தேதி பள்ளிக்கு செல்லாமல் நண்பர்களுடன் ஊர் சுற்றியுள்ளார். இதனை தாய் வாசுகி கண்டித்துள்ளார்.இதனால் வேதனையடைந்த சுபாஷ், பூச்சி மருந்து குடித்து மயங்கினார். குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சுபாஷ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி