மேலும் செய்திகள்
குடும்ப பிரச்னை: வாலிபர் தற்கொலை
07-Nov-2024
பெண்ணாடம் : பெண்ணாடம் அருகே தாய் கண்டித்ததால் மனமுடைந்த மகன் தற்கொலை செய்து கொண்டார்.பெண்ணாடம் அடுத்த ஓ.கீரனுார், இந்திரா நகரைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் சுரேஷ், 20. கேரளா மாநிலத்தில் பிளம்பராக வேலை பார்த்தவர் தீபாவளிக்கு சொந்த ஊர் வந்தார். நேற்று முன்தினம் சுரேஷின் தாய் வேலைக்கு ஏன் செல்லவில்லை என கேட்டார். இதனால் மனமுடைந்த சுரேஷ், அரளி விதை சாப்பிட்டு மயங்கி விழுந்தார்.அரியலுார் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து, புகாரின்பேரில் பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
07-Nov-2024