உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / உளுந்து சாகுபடி பயிற்சி: விவசாயிகள் பங்கேற்க அழைப்பு

உளுந்து சாகுபடி பயிற்சி: விவசாயிகள் பங்கேற்க அழைப்பு

விருத்தாசலம்; விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும் 24ம் தேதி நடக்கும் 'கிசான் சம்மான் சமரோஹ்' நேரடி இணைய ஒளிபரப்பு நிகழ்ச்சியில் விவசாயிகள் பங்கேற்க வேண்டும் என, திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன் அழைப்பு விடுத்துள்ளார்.அவரது செய்தி குறிப்பு; பீகார் மாநிலம் பாகல்பூரில் வரும் 24ம் தேதி பாரத பிரதமரின் பி.எம்., கிசான் திட்டத்தின் 'கிசான் சம்மான் சமரோஹ்' நிகழ்ச்சி நடக்கிறது.இவ்விழாவின் நேரடி இணைய ஒளிபரப்பு, அன்று பகல் 2:00 மணி முதல் பகல் 3:30 மணி விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.எனவே, இந்த நேரடி ஒளிபரப்பு மற்றும் உளுந்து சாகுபடி தொழில்நுட்பங்கள் பற்றிய பயிற்சியில் மாவட்ட விவசாயிகள் பங்கேற்று பயன்பெற வேண்டும்.இவ்வாறு செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை