ஆர்.எம்.மஹாவீர் ஜூவல்லரி ஆண்டு விழா
கடலுார்: கடலுார் ஆர்.எம்.மஹாவீர் ஜூவல்லரி ஆண்டு விழாவில் ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர். கடலுார் ஆர்.எம்.மஹாவீர் ஜூவல்லரியின் 63ம் ஆண்டு விழாவை முன்னிட்டு பூண்டியாங்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஜூவல்லரியில் அதன் உரிமையாளர்கள் ஆனந்த்குமார், விஜயகுமார் ஆகியோருக்கு அப்பள்ளி தலைமை ஆசிரியர் அருண் மற்றும் ஆசிரியர்கள் சால்வை அணிவித்து கவுரவித்தனர்.