உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தெலுங்கானா பக்தரின் 4 சவரன் நகை மாயம்

தெலுங்கானா பக்தரின் 4 சவரன் நகை மாயம்

சிதம்பரம், : சிதம்பரம் நடராஜர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த தெலுங்கானா பக்தரிடம், 4 சவரன் நகை மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.தெலுங்கானா மாநிலம், விக்கிரபாட் மாவட்டம், பக்ரி பகுதியை சேர்ந்த வெங்கடகிருஷ்ணன் மனைவி ராதிகா, 40; குடும்பத்துடன், நேற்று முன்தினம் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார். தரிசனம் முடிந்து வெளியே வந்து பார்த்தபோது, அவரது கழுத்தில் அணிந்திருந்த 4 சவரன் தங்க செயினை காணவில்லை.இதுகுறித்து சிதம்பரம் நகர போலீசில் அவர் புகார் அளித்தார்.புகாரின் பேரில், நகர போலீசார் வழக்குபதிந்து, நடராஜர் கோவிலில் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ