மேலும் செய்திகள்
மாணவியை கர்ப்பமாக்கிய மாணவர் மீது போக்சோ
04-Oct-2025
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே தனித்தனி சம்பவங்களில் இரண்டு சிறுமிகள் கர்ப்பமான புகாரில், 2 வாலிபர்கள் மீது போக்சோ பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடலுார் மாவட்டம், விருத்தாசலம் வடக்கு பெரியார் நகர், டிரைவர் குடியிருப்பை சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் தளபதி, 23. இவரும், பிளஸ் 2 படிக்கும் 17 வயதுடைய சிறுமியும் ஓராண்டாக காதலித்து வந்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் யாருக்கும் தெரியாமல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், வயிற்று வலி காரணமாக மருத்துவமனைக்கு சென்றபோது, சிறுமி 4 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. இதேபோல், பெண்ணாடம் அடுத்த வெண்கரும்பூரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் வெற்றிவேல், 32, என்பவர், 10ம் வகுப்பு படிக்கும் சிறுமியை காதலித்து, 5 மாதம் கர்ப்பமாக்கினார். ஊர்நல அலுவலர்கள் புவனேஸ்வரி, சாந்தி ஆகியோரது புகார்களின் பேரில், தளபதி, வெற்றிவேல் ஆகிய இருவர் மீதும் போக்சோ, குழந்தை திருமண தடைச்சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் விருத்தாசலம் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் ரேவதி வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
04-Oct-2025