உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அரசு கூர்நோக்கு இல்லத்திலிருந்து 3 சிறுவர்கள் ஓட்டம்

அரசு கூர்நோக்கு இல்லத்திலிருந்து 3 சிறுவர்கள் ஓட்டம்

கடலுார்: கடலுார் சாவடி பகுதியில் அரசு கூர்நோக்கு இல்லம் உள்ளது. அதில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நேற்று இரவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாவலர் சிவா,49, சாப்பிடுவதற்காக கேட்டை திறந்தபோது, அங்கு மறைந்திருந்த திருவண்ணாமலை, வேலுார், சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த ௩ சிறார் கைதிகள், சிவாவின் முகத்தில் மிளகாய் பொடியைதுாவி, அவரை தாக்கி அங்கிருந்து தப்பியோடினர். புகாரின் பேரில் புதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து அவர்களை தேடி வருகின் றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !