மேலும் செய்திகள்
குறைதீர் நாள் கூட்டம்: 621 மனுக்கள் குவிந்தன
24-Dec-2024
கடலுார்; கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.80,995 மதிப்பில் மொபைல் போன்களை கலெக்டர் வழங்கினார். கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். இதில், வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 573 மனுக்கள் பெறப்பட்டன. மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட மற்றும் காது கேளாத, வாய் பேசாத 5 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு தலா 16,199 ரூபாய் வீதம் மொத்தம் 80,995 ரூபாய் மதிப்பில் மொபைல் போன்களை கலெக்டர் வழங்கினார்.அப்போது, டி.ஆர்.ஓ., ராஜசேகரன், பயிற்சி கலெக்டர் ஆகாஷ், மாவட்ட வழங்கல் அலுவலர் ராஜீ, கலால் உதவி ஆணையர் சந்திரகுமார், மாற்றுத்திறனாளி நல அலுவலர் பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
24-Dec-2024