உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கொள்ளையடிக்க திட்டம்; 7 பேர் அதிரடி கைது

கொள்ளையடிக்க திட்டம்; 7 பேர் அதிரடி கைது

நெல்லிக்குப்பம்; கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு கஸ்டம்ஸ் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு ஆயுதங்களுடன் நின்றிருந்த 7 பேரை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். இதில், தோட்டப்பட்டு செல்வம் மகன் திவாகர்,22; ஞானவேல்,34; முரளி மகன் விக்ரம்,19,நத்தப்பட்டு பன்னீர்செல்வம் மகன் தமிழ்வளவன்,22; ராமலிங்கம் மகன் இளங்கோ,22; ராஜேந்திரன் மகன் பிரதீப்,28; பன்னீர்செல்வம் மகன் திவாகர்,19; என்பது தெரிந்தது. இவர்கள் வழிப்பறி செய்யவும், கொள்ளையடிக்கவும் திட்டமிட்டது தெரிந்தது. இவர்களில் திவாகர், தமிழ்வளவன் ஆகியோர் தோட்டப்பட்டில் பழைய இரும்பு கடை ஊழியர் கொலை செய்த வழக்கில் சிறை சென்று ஜாமினில் வெளியே வந்ததும் தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து 7 பேரையும் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 1 பைக்,7 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ