சிதம்பரத்தில் வியதீபாதம் திரளான மக்கள் பங்கேற்பு
சிதம்பரம் : சிதம்பரத்தில், வியதீபாதம் நாளையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரோடும் நான்கு வீதியில் வலம் வந்து நடராஜரை வழிபட்டனர்.மார்கழி மாத முழுவதும் திருப்பள்ளியெழுச்சி கால தரிசன பலன்கள், வியதீபாத தினத்தில் தரிசனம் செய்தால் கிடைக்கும் என்பது ஐதீகம். எனவே, வியதீபாதம் நாளான நேற்று அதிகாலை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிதம்பரம் தேரோடும் நான்கு வீதிகள் வழியாக வலம் வந்தனர். கோவிலின் உள் பிரகாரத்திலும் வலம் வந்து சிவகாமசுந்தரி சமேத நடராஜரை தரிசித்தனர்.நான்கு வீதிகளிலும் மக்களுக்கு பால் மற்றும் அன்னதானம் பக்தர்களால் வழங்கப்பட்டது. டி.எஸ்.பி., லாமேக் தலைமையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.