சித்தேரிக்குப்பத்திற்கு டவுன் பஸ் இயக்க நடவடிக்கை தேவை
விருத்தாசலம்: விருத்தாசலத்திலிருந்து சித்தேரிக்குப்பம் கிராமத்திற்கு அரசு டவுன் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விருத்தாசலம் அடுத்த சித்தேரிக்குப்பம், கவணை கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற் பட்டோர் வசிக்கின்றனர். இக்கிராம மக்கள் அத்தியாவசிய தேவைக்கும், மாணவர்கள் பள்ளி, கல்லுாரிகளுக்கும் விருத்தாசலம், மங்கலம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தினசரி சென்று வருகின்றனர். இந்த கிராமங்களுக்கென டவுன் பஸ் இயக்கப்படாததால் 3 கி.மீ., துாரம் உள்ள விருத்தாசலம் - உளுந்துார்பேட்டை சாலை, செம்பளக்குறிச்சி பஸ் நிறுத்தத்திற்கு சென்று பஸ் ஏறிச் செல்லும் நிலை உள்ளது. இதனால் மாணவர்கள் பள்ளி, கல்லுாரிகளுக்கும், பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்கும் குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் கடும் சிரமம் அடைகின்றனர். எனவே, கிராம மக்கள், மாணவர்கள் நலன் கருதி விருத்தாசலத்திலிருந்து சித்தேரிக்குப்பம் கிராமத்திற்கு டவுன் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.