உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிதம்பரம் கல்லுாரியில் சேர்க்கை கலந்தாய்வு

சிதம்பரம் கல்லுாரியில் சேர்க்கை கலந்தாய்வு

கிள்ளை; சிதம்பரம் அரசு கலைக் கல்லுாரியில், 2025-2026ம் கல்வியாண்டிற்கான இளநிலை முதலாமாண்டு பாடப்பிரிவுகளுக்கு இணைய வழியில் விண்ணப்பித்த மாணவர்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் 14ம் தேதி வரை நடக்கிறது. இதுகுறித்து கல்லுாரி முதல்வர் லலிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சிதம்பரம் அரசு கலைக் கல்லுாரியில், 2025-2026ம் கல்வியாண்டிற்கான இளநிலை முதலாமாண்டு இணைய வழியில் விண்ணப்பித்த மாணவர்களுக்கு நேற்று பி.ஏ., பொருளியல் (தமிழ்வழி, ஆங்கில வழி) மற்றும் பி.பி.ஏ., வணிக நிர்வாகவியல் பாடங்களுக்கு கலந்தாய்வு நடந்தது. இன்று (11ம் தேதி) பி.ஏ., தமிழ் மற்றும் ஆங்கில பாடப்பிரிவிற்கான முதல் கட்ட கலந்தாய்வு நடக்கிறது. நாளை 12ம் தேதி பி.எஸ்.சி., கணிதம் (தமிழ் வழி, ஆங்கில வழி), இயற்பியல், பொது வேதியியல், கணினி அறிவியல், பி.சி.ஏ., கணினி பயன்பாட்டியல், புள்ளியியல், தொழில் வேதியியல் (ஆங்கில வழி), தாவரவியல், விலங்கியல் (தமிழ் வழி, ஆங்கில வழி) ஆகிய பாடப்பிரிவுக்கு நடக்கிறது.13ம் தேதி பி.காம்., (ஆங்கில வழி), பி.ஏ., பொருளியல் (தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி), பி.பி.ஏ., வணிக நிர்வாகவியல் (ஆங்கில வழி), பி.ஏ., தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடக்கிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி