குறிஞ்சிப்பாடி நியூ ஸ்ரீவள்ளி விலாசில் அட்சய திருதியை சிறப்பு விற்பனை
கடலுார் : குறிஞ்சிப்பாடி நியூ ஸ்ரீவள்ளி விலாஸ் ஜூவல்லரியில் அட்சய திருதியை சிறப்பு விற்பனை துவங்கியது. குறிஞ்சிப்பாடி ஆதிவராக செட்டித் தெரு நியூ ஸ்ரீவள்ளி விலாஸ் ஜூவல்லரியில் அட்சய திருதியை சிறப்பு விற்பனை நேற்று துவங்கியது. வாடிக்கையாளர்கள் நகைகளை ஆர்வத்துடன் தேர்வு செய்து வாங்கிச் சென்றனர். இதுகுறித்து உரிமையாளர் சிங்காரவேல் கூறுகையில், 'அரசு உத்தரவுப்படி HUID ஆறு இலக்க முத்திரையுடன் அனைத்து நகைகளும் விற்பனை செய்யப்படுகிறது. வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான புதுப்புது டிசைன்களில் தங்க நகைகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. குறைந்த சேதாரம், செய்கூலியுடன் நகைகள் விற்பனை செய்யப்படுகிறது. சிறுசேமிப்பு திட்டத்தில் சேர்ந்து வாடிக்கையாளர்கள் பயன்பெற வேண்டும்' என்றார். அட்சய திருதியையொட்டி சிறப்பு பூஜை செய்யப்பட்டு விற்பனை துவங்கியது.