உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

கடலுார்: இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித் தொகைக்கான விண்ணப்பங்கள் வரவே ற்கப்படுகின்றன. இதுகுறித்து கலெக்டர் அலுவலக செய்திக் குறிப்பு: இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித் தொகை திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட உள்ளது. 2025-26ம் ஆண்டிற்கு தேசிய கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க பட்டியிலிடப்பட்ட பள்ளி களில் பயிலும் மாணவர்களுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. பெற்றோரது ஆண்டு வருமான வரம்பு 2.50 லட்சம் ரூபாய் ஆகும். இத்திட்டத்தின் கீழ் மாணவர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்கள் விண்ணப்பத்தை சரிபார்க்க் கால அவகாசம் வரும் நவம்பர் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது . கடந்த நிதியாண்டில் பயனடைந்த மாணவ, மாணவியர்கள் தேசிய கல்வி உதவித்தொகை இணைய தளத்தில் புதுப்பித்தல் விண்ணப்பம் என்ற இணைப்பில் (லிங்க்) சென்று பதிவு செய்து 2025-26ம் ஆண்டிற்கான விண்ணப்பித்தை புதுப்பித்துக் கொள்ளலாம். புதியதாக விண்ணப்பிக்க விரும்பும் 9 மற்றும் 11ம் வகுப்புகளில் பட்டியிலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள், தேசிய கல்வி உதவித்தொகைத் தளத்தில் தங்களது மொபைல் எண் மற்றும் ஆதார் விபரங்களை உள்ளீடு செய்தால் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரப்பெறும். அதனை பயன்படுத்தி 2025-26ம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகைக்கு உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம். மேலும், விவரங்களுக்கு (https://scholarships.gov.in) என்ற இணையதளத்தினை அணுகி கல்வி உதவித்தொகை பயன்களைப் பெற லாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !