உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பஸ் ஸ்டாண்டில் வாலிபர் மீது தாக்கு

பஸ் ஸ்டாண்டில் வாலிபர் மீது தாக்கு

கடலுார்: புவனகிரி அடுத்த கொத்தட்டையைச் சேர்ந்தவர் நாகமுத்து மகன் வினோத்குமார்,29. இவர் கடந்த 25ம் தேதி இரவு சென்னை செல்வதற்காக கடலுார் பஸ் ஸ்டாண்டு வந்தார். அங்கு அருகில் நின்று கொண்டிருந்த கடலுார், கூத்தப்பாக்கத்தைச் சேர்ந்த இக்பால் மகன் முஸ்தபா,30, என்பவரிடம் சென்னை செல்லும் பஸ் எங்கே நிற்கும் எனக்கேட்டார். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த முஸ்தபா தாக்கியதில் காயமடைந்த வினோத்குமார், கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது புகாரின் பேரில், கடலுார் திருப் பாதிரிப்புலியூர் போலீசார், முஸ்தபா மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை