உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஓட்டளிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு போட்டிகள்

ஓட்டளிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு போட்டிகள்

கடலுார்: மாவட்டத்தில் அனைவரும் ஓட்டளிப்பதை வலியுறுத்தி, தலா 25 பள்ளி, கல்லுாரிகளில் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட உள்ளது.இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு சுருக்க திருத்த முகாம்,வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.இந்நிலையில் தேர்தல் ஆணையம் வாக்களிப்பதன் அவசியத்தை அனைவரும் அறிந்து கொள்ளும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தஅதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது. குறிப்பாக மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டது.அதன்பேரில், மாவட்ட நிர்வாகம் சார்பில் 'வாக்களிப்பதே சிறந்தது - நிச்சயம் வாக்களிப்பேன்' என்றதலைப்பில், தலா 25 பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கு சுவர் இதழ் தயாரித்தல், 100 வார்த்தைகளில் கட்டுரை எழுதுதல் போட்டிகள், மகளிர் சுயஉதவிகுழுக்களுக்கு வாக்குச்சாவடி அமைவிடங்களில் ரங்கோலி போட்டிகள் நடத்தப்பட உள்ளது.போட்டிகளை நவம்பருக்குள் முடிக்கவும், மாவட்ட அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு தேசிய வாக்காளர் தினமான ஜன., 25ல் பரிசு வழங்கபட உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !