உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அரசு மாதிரி மகளிர் பள்ளியில் மாணவிகளுக்கு சைக்கிள்

அரசு மாதிரி மகளிர் பள்ளியில் மாணவிகளுக்கு சைக்கிள்

புவனகிரி,: புவனகிரி அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு அரசு சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியை சரவணஜான்சிராணி தலைமை தாங்கினார். பட்டதாரி ஆசிரியர் செந்தில்குமார் வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் தேவதாஸ்படையாண்டவர், ரத்தினசுப்பிரமணியன், அமுதாராணி, கவுன்சிலர் கிருஷ்ணன், பள்ளி மேலாண்மை குழு தலைவி சாந்தலட்சுமி, ஊழல் எதிர்ப்பு இயக்கத் தலைவர் வழக்கறிஞர் குணசேகரன் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி சேர்மன் கந்தன், மாவட்ட கல்வி அலுவலர் துரைபாண்டியன் ஆகியோர், பிளஸ் 1 மாணவிகள் 229 பேருக்கு விலையில்லா சைக்கிள் வழங்கினர்.உதவி தலைமையாசிரியை எழிலரசி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி