உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பா.ஜ., கருத்து கேட்பு முகாம்

பா.ஜ., கருத்து கேட்பு முகாம்

புவனகிரி: பா.ஜ., சார்பில் உங்கள் ஆலோசனை, எங்கள் வாக்குறுதி குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்பு முகாம் நடந்தது.புவனகிரி, சாமுண்டீஸ்வரி கோவில் அருகில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் திருமாவளவன் தலைமை தாங்கினார். பட்டியலணி மாநில துணை தலைவர் வெற்றிவேல் வரவேற்றார். புவனகிரி சட்டசபை தொகுதி பொறுப்பாளர் ஸ்ரீதரன், மாவட்ட பொருளாளர் முருகன், மாவட்டத் துணைத் தலைவர் கோபிநாத் கணேசன், ஓ.பி.சி., அணி தியாகு, ஒன்றிய தலைவர் நாகராஜன் முன்னிலை வகித்தனர்.சிதம்பரம் லோக்சபா தொகுதி பொறுப்பாளர் தடாபெரியசாமி, தேசிய பொதுக்குழு உறுப்பினர் முன்னாள் எம்.எல்.ஏ., அருள், மாவட்ட தலைவர் மருதை, முன்னாள் ராணுவ வீரர்கள் பிரிவு, துணைத் தலைவர் பாலசுப்ரமணியன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பொது மக்களிடத்தில் கருத்து கேட்பு குறித்த மனு கொடுத்து பூர்த்தி செய்து பெட்டியில் பெற்றனர்.நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் சின்னதுரை, ராஜா சுந்தரமூர்த்தி, வழக்கறிஞர் சத்தியமூர்த்தி, பகிரதன், வடமலை, கோவிந்தசாமி, கஜேந்திரசிங்க், ராகேஷ், ஆளவந்தார், பழனி, பழனியப்பன், விஜயகுமார், ஜோதி, இளையமாறன், கந்தசாமி, வள்ளலார், ராஜேந்திரன், சக்திவேல், மகேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஒன்றிய துணைத் தலைவர் லட்சுமிநரசிம்மன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி