மேலும் செய்திகள்
இறந்தவர் யார் போலீஸ் விசாரணை
09-Oct-2025
கடலுார், : ஆற்றில் கரை ஒதுங்கிய அடையாளம் தெரியாத பெண் சடலம் குறித்து போலீ சார் விசாரிக்கின்றனர். கடலுார், திருப்பாதிரிப்புலியூரில் கெடிலம் ஆற்று பாலத்தின் கரையில் நேற்று 50 வயது மதிக்கத் தக்க பெண் சடலம் அழுகிய நிலையில் ஒதுங்கியது. இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இறந்தவர் ஊதா நிற சேலை, நீல நிற ஜாக்கெட் அணிந்திருந்தார். திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
09-Oct-2025