பைக் வாங்கி கொடுக்காததால் சிறுவன் தற்கொலை
கடலுார்; தந்தை பைக் வாங்கிக் கொடுக்காத விரக்தியில் 15 வயது சிறுவன் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கடலுார், எஸ்.என்.சாவடியைச் சேர்ந்தவர் தீபன்சக்ரவர்த்தி, இவரது 15 வயது மகன். தனக்கு பைக் வாங்கி தரும்படி தந்தையிடம் கேட்டுள்ளார். தந்தை மறுத்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் சிறுவன் வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கடலுார் புதுநகர் போலீ சார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.