பிராமணர் சங்கம் பஞ்சாங்கம் வழங்கல்
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் கீழ்பட்டாம்பாக்கம் ஓசூரம்மன் கோவிலில், நெல்லிக்குப்பம் கிளை பிராமணர் சங்க கூட்டம் நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.அப்போது, பிராமணர் சங்கம் சார்பில் தமிழ் வருடம் விசுவாவசு வருடத்துக்கான பஞ்சாங்கத்தை சங்க தலைவர் வெங்கட்ரமணராஜீ வழங்கினார். பொதுச் செயலாளர் ஜெயக்குமார், பொருளாளர் சேனாபதி குருக்கள், ரமேஷ் பட்டாச்சாரியார், பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.