மேலும் செய்திகள்
பள்ளி மாணவர்களுக்கு பிராமணர் சங்கம் பரிசு
05-Aug-2025
கடலுார்: தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் கூத்தப்பாக்கம் கிளையில் மாதாந்திர கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கிளை தலைவர் ராஜாராமன் தலைமை தாங்கினார். பாலகுரு வரவேற்றார். பொருளாளர் கணேசன், நிர்வாகிகள் சுரேஷ், பாஸ்கரன், ஸ்ரீவத்சன், சம்பத், அலமேலு, ஜானகி, வித்யாகோமதி, ஸ்ரீவித்யா, ஸ்ரீதேவி உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவி சுபத்ராவிற்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது. பொதுச் செயலாளர் பிரணதார்த்திஹரன் நன்றி கூறினார்.
05-Aug-2025