பரங்கிப்பேட்டையில் காலை உணவு திட்டம் துவக்கம்
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை பேரூராட்சியில் துாய்மைப்பணியாளர்களுக்குக்கான காலை உணவு திட்ட துவக்க விழா நடந்தது. பேரூராட்சி சேர்மன் தேன்மொழி சங்கர் தலைமை தாங்கி, துாய்மைப்பணியாளர்களுக்கு காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்தார். துணை சேர்மன் முகமது யூனுஸ், செயல் அலுவலர் மயில்வாகனன் முன்னிலை வகித்தனர். விழாவில், கவுன்சிலர்கள் செழியன், தையல்நாயகி கணேசமூர்த்தி, மாரியப்பன், ஜாபர் அலி உட்பட பலர் பங்கேற்றனர். சுகாதார ஆய்வாளர் பிரித்தி, நன்றி கூறினார்.