வீட்டின் கதவை உடைத்து திருட்டு
புதுச்சத்திரம்: வீட்டின் கதவை உடைத்து பணம், பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். புதுச்சத்திரம் அடுத்த கீழ்பூவாளிக்குப்பத்தை சேர்ந்தவர் ஜெயராமன், 60; இவர் கடந்த 4ம் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு, சென்னையில் இருக்கும் மகனை பார்க்க சென்றார். நேற்று வீட்டிற்கு திரும்பிய அவர், பின் பக்க கதவு உடைந்திருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த ரூ.5 ஆயிரம், பித்தளை பொருட்கள் உள்ளிட்டவைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது. புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.