உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / திடீர் நெஞ்சு வலி கொத்தனார் பலி

திடீர் நெஞ்சு வலி கொத்தனார் பலி

கடலுார் : திடீர் நெஞ்சு வலியால் கொத்தனார் பரிதாபமாக இறந்தார்.கடலுார் அடுத்த நத்தப்பட்டை சேர்ந்தவர் பாஸ்கர், 50; கொத்தனார். இவர், நேற்று முன்தினம் கே.என்., பேட்டையில் வேலை செய்தார். அப்போது, திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால், அருகிலிருந்தவர்கள் அவரை கடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.இதுகுறித்து கடலுார் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ