பெண்ணை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
குள்ளஞ்சாவடி: பெண்ணை தாக்கிய, 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்குள்ளஞ்சாவடி அடுத்த கோ.சத்திரத்தை சேர்ந்த ரமேஷ் மனைவி, குணசுந்தரி, 34. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ரவி குடும்பத்தாருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதில் குணசுந்தரியை, ரவி அவரது மனைவி பானு, மகன் சர்மா ஆகியோர் தாக்கியுள்ளனர்.இதுகுறித்த புகாரின்பேரில் குள்ளஞ்சாவடி போலீசார் ரவி உள்ளிட்ட மூவர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.