உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தகராறில் ஈடுபட்ட 3 பேர் மீது வழக்கு

தகராறில் ஈடுபட்ட 3 பேர் மீது வழக்கு

பண்ருட்டி; கோவில் திருவிழாவில் தகராறில் ஈடுபட்ட 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். பண்ருட்டி அடுத்த கீழக்கொல்லை கிராமம் முத்து மாரியம்மன் கோவில் திருவிழாவில் நேற்று முன்தினம் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடந்தது. அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் வினோத்குமார், ராஜாராம் மகன் ராஜ்குமார், சந்தோஷ்குமார் மகன் கிருஷ்ணகுமார் ஆகியோர் தகராறில் ஈடுபட்டனர். இதுகுறித்து புகாரின் பேரில் முத்தாண்டிக்குப்பம் போலீசார், வினோத்குமார் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை