உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாமியாரிடம் தகராறு மருமகள் மீது வழக்கு

மாமியாரிடம் தகராறு மருமகள் மீது வழக்கு

விருத்தாசலம், : சீர்வரிசை பொருட்களை திரும்பக் கேட்டு மாமியாரிடம் தகராறு செய்த மருமகள் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். விருத்தாசலம் அடுத்த விளாங்காட்டூரைச் சேர்ந்தவர் பெரியசாமி மகன் மணிகண்டன். இவரது மனைவி வித்யா, 27; கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். கடந்த 6ம் தேதி மாமனார் வீட்டிற்கு சென்ற வித்யா, அங்கிருந்த மாமியார் மாரிமுத்தாள், 79; என்பவரிடம் சீர்வரிசை பொருட்களை திரும்பக் கேட்டு வாக்குவாதம் செய்து, ஆபாசமாக பேசினார். புகாரின் பேரில், வித்யா மீது விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ