உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வாகனம் விற்பனை செய்வதாக மோசடி : சென்னை ஆசாமி கைது

வாகனம் விற்பனை செய்வதாக மோசடி : சென்னை ஆசாமி கைது

கடலுார்: கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அடுத்த ஒரத்துாரைச் சேர்ந்தவர் மணிகண்டன் மகன் வசந்தகுமார், 21; இவர், 'ஓ.எல்.எக்ஸ்' என்ற 'ஆப்' பில் பழைய இரு சக்கர வாகனம் விற்பனைக்கு இருப்பதாக வெளியான விளம்பரத்தை பார்த்து அதற்குரிய பணத்தை அடையாளம் தெரியாத நபருக்கு ஆன்லைன் மூலம் 12,500 ரூபாய் அனுப்பினார். ஆனால் வாகனம் அனுப்பப்படவில்லை. இதேபோன்று, ஸ்ரீமுஷ்ணம், குணமங்கலம் வேல்முருகன் மகன் விஜயகுமார்,27; என்பவர் 15,800 ரூபாயும், குறிஞ்சிப்பாடி, வடக்குத்து சக்திவேல்,24; என்பவர் 15,000 ரூபாய் செலுத்தியும் வாகனம் கிடைக்காமல் பாதிக்கப்பட்டனர். இவர்கள் 3 பேரும் அளித்த புகாரின் பேரில், கடலுார் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப் பதிந்து விசாரித்து, கடந்த மே 4ம் தே தி வேப்பூரைச் சேர்ந்த வெற்றிவேலை கைது செய்தார். இவர் அளித்த தகவலின்பேரில், சென்னை, அகத்தியர் நகரைச் சேர்ந்த மைக்கேல்ராஜ் 39; என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரிந்தது. கோயம்புத்துார் மாவட்டம், குனியமுத்துார் பகுதியில் பதுங்கியிருந்த அவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை