உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுார் கடலில் மூழ்கி கல்லுாரி மாணவர் பலி

கடலுார் கடலில் மூழ்கி கல்லுாரி மாணவர் பலி

கடலுார்: கடலுார் சில்வர் பீச்சில் குளித்த கல்லுாரி மாணவர், நீரில் மூழ்கி இறந்தார். கடலுார், தேவனாம்பட்டினத்தை சேர்ந்தவர் ரகுபதி மகன் ரவி ராஜன் 20; இவர், கடலுார் கலைக் கல்லுாரியில் பி.பி.ஏ., 3ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் ரவி ராஜன், அதே பகுதியைச் சேர்ந்த நண்பர் கோகுலசுதர்சன் உட்பட 4 பேருடன் சேர்ந்து கடலுார் சில்வர் பீச்சில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது, ராட்சத அலையில் சிக்கி ரவி ராஜன், கோகுல சுதர்சன் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். சக நண்பர்கள் கூச்சலிடவே அருகில் இருந்தவர்கள், கடலில் மூழ்கிய 2 பேரையும் மீட்டு கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர் பரிசோதித்ததில், ரவி ராஜன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். கோகுல சுதர்சனனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. புகாரின் பேரில், தேவனாம்பட்டினம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ