உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கல்லுாரி மாணவி மாயம்

கல்லுாரி மாணவி மாயம்

நடுவீரப்பட்டு: சி.என்.பாளையத்தில் காணாமல் போன கல்லுாரி மாணவியை போலீசார் தேடி வருகின்றனர். நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் திடீர்குப்பத்தை சேர்ந்தவர் செல்வம். இவரது மகள் காவியா,19; இவர் கடலுாரில் உள்ள தனியார் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். காவியா நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் கல்லுாரிக்கு சென்றவர் வீடு திரும்ப வில்லை. காவியாவை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. புகாரின் பேரில் நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !