மேலும் செய்திகள்
த.மா.கா., ஆலோசனை
09-Sep-2025
குறிஞ்சிப்பாடி; குறிஞ்சிப்பாடியில் நகர காங்., சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. நகர தலைவர் குமார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் திலகர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். வார்டு கமிட்டி அமைப்பது. குறிஞ்சிப்பாடி புறவழிச்சாலை மேம்பாலத்தில் விபத்துகளை தவிர்க்க வேகத்தடை அமைக்க வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், நிர்வாகிகள் வைத்தியநாதன், அம்சவேல், முத்துக்குமாரசாமி, வீரமணி, கோவிந்தராசு, மணி, சேகர், அன்பழகன், அகமது உசேன், சேட்டு, தர்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
09-Sep-2025