மேலும் செய்திகள்
காங்., கையெழுத்து இயக்கம்
24-Sep-2025
கடலுார் : கடலுார் மஞ்சக்குப்பத்தில் பா.ஜ., அரசின் ஓட்டு திருட்டைக் கண்டித்து மத்திய மாவட்ட காங்., சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது. மாவட்ட தலைவர் திலகர் தலைமை தாங்கினார். மாநகர தலைவர் வேலுச்சாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் குமார், ரவிக்குமார், ரங்கமணி முன்னிலை வகித்தனர். விஷ்ணுபிரசாத் எம்.பி.,சிறப்பு விருந்தினராக பங்கேற்று கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார். வட்டார தலைவர்கள் ராஜா, ராமகிருஷ்ணன், மாவட்ட துணைத் தலைவர் ஆனந்தன், மாவட்ட நிர்வாகிகள் கிஷோர், காமராஜ், தொழிற்சங்க தலைவர் சுகதேவ், சிவா உட்பட பலர் பங்கேற்றனர்.
24-Sep-2025