கடலுாரில் கிரிக்கெட் போட்டிகள்
கடலுார்: கடலுார் அண்ணா விளையாட்டரங்கில், மாவட்டத்தில் உள்ள அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது.கடலுார் மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில், பதிவு செய்யப்பட்ட கிரிக்கெட் சங்கங்ளுக்கு இடையிலான அகாடமி கோப்பை கிரிக்கெட் போட்டி அண்ணா விளையாட்டரங்கில் துவங்கியது.மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் தலைவர் வெங்கடேஷ் தலைமை தாங்கி, போட்டியை துவக்கி வைத்தார்.கடலுார், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, நெய்வேலி, சிதம்பரம், விருத்தாசலம் உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 16 அணிகள் போட்டிகளில் பங்கேற்கின்றன. போட்டிகள் நாக் அவுட் முறையில் நடத்தப்படுகிறது. இறுதிப்போட்டி வரும் 17ம் தேதி நடக்கிறது.ஏற்பாடுகளை மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் கூத்தரசன் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.