பேரிடர் கால மீட்பு விழிப்புணர்வு
கடலுார்: சர்வதேச பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு, தீயணைப்பு துறை சார்பில் பேரிடர் கால மீட்பு பணி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.கடலுார் திருப்பாதிரிப்புலியூர் பஸ் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, டி.ஆர்.ஓ., ராஜசேகரன் தலைமை தாங்கினார். ஆர்.டி.ஓ., அபிநயா, தாசில்தார் பலராமன் முன்னிலை வகித்தனர்.