உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் வழங்கல்

பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் வழங்கல்

நடுவீரப்பட்டு: பண்ருட்டி அடுத்த பாலூரில், அம்பேத்கர் வாரியர் சமூக அமைப்பு சார்பில் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில இலக்கண புத்தகம் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் அமைப்பு மாநில தலைவர் சிவநேசன் தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் உத்திரவேல் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் முஜிபுர்ரஹ்மான், மகளிரணி சுகந்தி, டாக்டர் திலிப், சுபாஷ், தட்சணாமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பாலூர் சுற்று பகுதியை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவ, மாணவிகளுக்கு ஆங்கில இலக்கண புத்தகம் வழங்கப்பட்டது.ஸ்டாலின் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ