வள்ளி விலாஸ் ஆலயாபள்ளியில் தீபாவளி
கடலுார்: நெல்லிக்குப்பம் அடுத்த வாழப்பட்டு ஸ்ரீ வள்ளி விலாஸ் ஆலயா சி.பி.எஸ்.இ., பள்ளியில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது.பள்ளி மாணவர்கள் பாதுகாப்பாக தீபாவளி கொண்டாடுவது குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.பசுமை பட்டாசுகளின் நன்மைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இதில், மாணவர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர்.